search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்"

    டீசல் விலை உயர்வை கண்டித்து கடந்த 18-ம் தேதி முதல் நடைபெற்று வந்த லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. #TNLorryOwnersstrike

    சென்னை:

    டீசல் விலை உயர்வை கண்டித்து கடந்த 18-ம் தேதி முதல் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்தது. இதையடுத்து நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடவில்லை. சென்னையில் 5 லட்சம் லாரிகள் ஓடாது. வெளிமாநில லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விட்டன.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அடுத்த மாதம் (ஜூலை) 20-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்த வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சுகுமார் அறிவித்துள்ளார். வருகிற 27-ம் தேதி மத்திய போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய போக்குவரத்துத்துறை இணைச்செயலாளர் உத்தரவாதம் அளித்ததையடுத்து, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #TNLorryOwnersstrike
    ×